sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெருக்கெடுக்கும் வெள்ளம்; குளிரும் மக்கள் உள்ளம்

/

பெருக்கெடுக்கும் வெள்ளம்; குளிரும் மக்கள் உள்ளம்

பெருக்கெடுக்கும் வெள்ளம்; குளிரும் மக்கள் உள்ளம்

பெருக்கெடுக்கும் வெள்ளம்; குளிரும் மக்கள் உள்ளம்


ADDED : ஜூன் 27, 2024 11:05 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தென் மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் மலையடிவாரங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கோவை, நீலகிரி மாவட்ட அணைகள் நிரம்பி, தண்ணீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால், நொய்யல் ஆற்றில் வெள்ளம் வழிந்தோட துவங்கியிருக்கிறது.கோவை மாவட்டத்தில் இருந்து வரும் நொய்யல் ஆறு, திருப்பூரின் மையப்பகுதியை கடந்து, கரூர் மாவட்டத்துக்குள் நுழைகிறது. 'தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியிருப்பதால் அணைகள் நிரம்பி, குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்; விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின், 60 ஆண்டு கடந்த எதிர்பார்ப்பான அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்யும் பருவமழையை நம்பியே உள்ள நிலையில், தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழையில் மேட்டுப்பாளையம், பில்லுார் அணை நிரம்பி, தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கரையோர மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவிநாசி - அத்திக்கடவு திட்டம் செயல்படுத்த வாய்ப்பு


பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, காலிங்கராயன் அணைக்கட்டு நிரம்பி, உபரிநீர் வெளியேறும் பட்சத்தில், அத்திக்கடவு அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்த முடியும் என்ற நிலையில், இம்முறையாவது திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள் எதிர்பர்க்கின்றனர்.
'களஞ்சியம்' விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் கூறுகையில், ''60 ஆண்டு எதிர்பார்ப்பு, தொடர் போராட்டத்தின் விளைவாக உருவான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மழையில்லை என்ற காரணத்தை கூறியே, கடந்த இரு ஆண்டுகளாக காலம் தாழ்த்தப்பட்டு வந்த நிலையில், தென் மேற்கு பருவமழை வலுவாக பெய்து வரும் நிலையில், இம்முறையாவது திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்'' என்றார்.--








      Dinamalar
      Follow us