sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாடுகளுக்கு தீவன மேலாண்மை வேளாண் பல்கலை., அறிவுரை

/

மாடுகளுக்கு தீவன மேலாண்மை வேளாண் பல்கலை., அறிவுரை

மாடுகளுக்கு தீவன மேலாண்மை வேளாண் பல்கலை., அறிவுரை

மாடுகளுக்கு தீவன மேலாண்மை வேளாண் பல்கலை., அறிவுரை


ADDED : மே 02, 2024 11:20 PM

Google News

ADDED : மே 02, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:கறவை மாடுகளுக்கு தீவனமளிக்கும் போது, நுண்ணூட்டச்சத்துக்களும் உள்ளடக்கி இருக்க வேண்டும் என, கால்நடை வளர்ப்போருக்கு, வேளாண் பல்கலை., அறிவுறுத்தியுள்ளது.

கறவையின் உற்பத்தி திறனுக்கேற்ற கலப்பு தீவனம் அவசியமாகும்.

புல், (கினியா, நேப்பியர்) அல்லது பயறு வகை (லியூசர்ன்) அளிப்பதால், 1 கிலோ அடர்தீவனத்தைக் குறைக்க முடியும். வைக்கோலும், புல் தேவையைக் குறைக்கும். முறையான தீவனமளிப்பு முக்கியமாகும். காலை, மாலை இரு வேளையும் அடர்தீவனத்தைப் பிரித்து பால் கறக்கும் முன் அளிக்க வேண்டும்.

அதேபோல் உலர்தீவனமும் காலையில் பால் கறந்து, நீர் அளித்த பின்பும், மாலையில் பால் கறந்த பின்பும் கொடுக்கலாம்.

அதிக பால் தரும் மாடுகளுக்கு நாளொன்றுக்கு, 3 வேளை உணவு அளிக்கலாம். சரியான அளவு இடைவெளி அதன் செரிக்கும் திறனையும், பாலின் கொழுப்புச்சத்து அளவையும் அதிகரிக்கும். அதிக உலர்தீவனம் அளித்தால், மாடுகளின் செரிக்கும் தன்மை குறையலாம். தானிய வகைகள் சரியான அளவு அரைத்துக் கொடுக்க வேண்டும். வைக்கோலுடன் பயறு வகை மற்றும் சிறிய ஈரப்பதமுள்ள புற்களைக்கலந்து அளிக்கலாம்.

அடர் அல்லது கலப்பு தீவனம் நீருடன் கலந்து அளிக்கலாம். பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனங்களை பால் கறந்த பின்பு அளிக்கலாம்.

தீவன சேமிப்புக்கிடங்கு நல்ல காற்றோட்டத்துடன் உலர்ந்து சுத்தமாக இருக்க வேண்டும். பூஞ்சான் தாக்கிய கெட்டுப்போன தீவனங்களை கால்நடைகளுக்கு அளிக்கக்கூடாது.

நல்ல பால் உற்பத்தி கொண்ட மாடுகளுக்கு அடர் உலர் தீவன விகிதம், 60க்கு 40 சதவீதம் அளவில் இருக்க வேண்டும்.

இவ்வாறு, அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us