/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர்வழித்தடத்தில் குப்பை அகற்றம்
/
நீர்வழித்தடத்தில் குப்பை அகற்றம்
ADDED : ஏப் 27, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் அடுத்த தொங்குட்டிபாளையம் ஊராட்சி அலுவலகம் எதிரே செல்லும் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. மழைநீர் குட்டைக்குச் செல்ல வழி இன்றி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடும் அபாயம் இருந்தது.
இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, அதிகாரிகள் குப்பையை அகற்றி சுத்தப்படுத்தினர். இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

