sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்கள்; பயணியர் பாதிப்பு

/

நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்கள்; பயணியர் பாதிப்பு

நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்கள்; பயணியர் பாதிப்பு

நடைபாதையை ஆக்கிரமித்து பொருட்கள்; பயணியர் பாதிப்பு


ADDED : ஆக 20, 2024 02:21 AM

Google News

ADDED : ஆக 20, 2024 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிழற்கூரையில் போஸ்டர்


உடுமலை - திருப்பூர் ரோடு சேரன் நகர் பயணியர் நிழற்கூரை சேதமடைந்து, விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், நிழற்கூரை பொலிவிழந்து காணப்படுகிறது. அவற்றை அகற்றி பராமரிக்க உள்ளாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- செல்வம், உடுமலை.

நடைபாதை ஆக்கிரமிப்பு


உடுமலை, பஸ் ஸ்டாண்டு நடைபாதையை ஆக்கிரமித்து, வணிக கடைகள் பொருட்கள் வைப்பதற்கு பயன்படுத்திக்கொள்கின்றன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வழியில்லாமல் இடையூறாக உள்ளது. நகராட்சியினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

- வரதராஜன், உடுமலை.

ரோட்டை சரிசெய்யுங்க


உடுமலை, மாரியம்மன் கோவில் வீதியில் ரோடு குண்டும் குழியுமாக குறுகலாகவும் உள்ளது. இரண்டுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வரும்போது போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு, நெரிசலாகிறது. பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் வழியில்லாமல் இருப்பதால் சிரமப்படுகின்றனர்.

- கனகராஜ், உடுமலை.

நாய்த்தொல்லை


உடுமலை அரவிந்த் கண் மருத்துவமனை பின் புறம் பாலாஜி நகரில் நாய் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் ரோட்டில் நடமாட முடிவதில்லை. எனவே, நாய்களை கட்டுப்படுத்த நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முருகன், உடுமலை.

தெருவிளக்குகள் எரிவதில்லை


உடுமலை, பழனியாண்டவர் நகரிலிருந்து ஜீவா நகர் செல்லும் ரோட்டில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் இருப்பதால், இரவு நேரங்களில் அவதிப்படுகின்றனர். இரவில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் திருட்டு பயத்துக்கும் ஆளாகின்றனர்.

- ராகவன், உடுமலை.

அடையாளம் இல்லை


முக்கோணத்திலிருந்து எரிசனம்பட்டி செல்லும் ரோட்டில், வேகத்தடைகள் அடையாளம் போடப்படாமல் இருப்பதால், அவ்வழியாக வாகனங்களில் செல்லும் வெளியூர் பயணியர் விபத்துக்குள்ளாகின்றனர்.

- சந்திரமோகன், உடுமலை.

சேதமடைந்த ரோடு


பொள்ளாச்சி ஜோதிநகர், விஷால் கார்டன் ரோடு சேதமடைந்து மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், அவ்வழியில் செல்பவர்கள் சிரமத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தேங்கிய நீரை உடனடியாக அகற்றம் செய்து ரோட்டை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- -டேனியல், பொள்ளாச்சி.

ரோடு சேதம்


பொள்ளாச்சி - கோவை ரோட்டில், கோவில்பாளையம் அடுத்துள்ள சோழனூர் ரோடு குறுகலாகவும், ஆங்காங்கே குழி ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளதால், வாகன ஓட்டுநர்கள் இந்த ரோட்டில் சிரமத்துடன் பயணித்து வருகின்றனர். வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.

-- -மணிகண்டன், கோவில்பாளையம்.

'பார்க்கிங்' வசதி வேண்டும்


வால்பாறையில் பல இடங்களில் சுற்றுலா பயனியர் வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வால்பாறை நகரின் முக்கிய இடங்களில் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- -நவீன்குமார், வால்பாறை.

கழிப்பிட வசதி மேம்படுத்தனும்


பொள்ளாச்சி, அரசு மருத்துவமனையில் எம்.எஸ்., வார்டு எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு பகுதியில் ஒரு கழிப்பிடம் மட்டுமே உள்ளது. இதனால், மருத்துவமனை வருவோர் சிரமப்படுகின்றனர். எனவே, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இருபாலருக்கும் தனித்தனி கழிப்பிட வசதி ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- -ரமேஷ், பொள்ளாச்சி.

இடம் ஆக்கிரமிப்பு


பொள்ளாச்சி, வெற்றிலை கடை சந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பலர் அவ்வழியில் செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். இரு சக்கர வாகனம் செல்லவும் இடர்பாடுகள் நிலவுகிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றம் செய்ய வேண்டும்.

-- -ரஞ்சித், பொள்ளாச்சி.






      Dinamalar
      Follow us