ADDED : ஆக 23, 2024 10:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, தட்டான் குட்டையில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் தொடர்ந்து அரசு - - வேம்பு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் அதிகாலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை; காலை, 8:00க்கு மேல், 9:15 மணிக்குள் ஸ்ரீ செல்வ விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
பின், தொழில் சிறக்கவும், பொதுமக்கள் நலன் வேண்டியும் அரசு -- வேம்பு மரத்துக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

