ADDED : மே 07, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்- 2 தேர்வில், 99.5 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளி மாணவி மல்லீஸ்வரி, 581 மதிப்பெண், விவேகா, 580 மதிபெண், பிரியதர்ஷினி, 559 மதிப்பெண் பெற்று பள்ளிக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.
கணக்குப்பதிவியல், வணிகவியல் ஆகிய இரண்டு பாடத்தில், 4 மாணவர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய, 136 பேரில் 135 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில், 30 பேர், 550 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர்.
சாதித்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சாண்டி, உதவி தலைமை ஆசிரியர் பிரகாஷ், பி.டி.ஏ., தலைவர் சண்முகசுந்தரம், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சவுந்தரராஜன், செயலாளர் செந்தில்குமார் பாராட்டினர்.

