sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெருமாநல்லுாரில் நாளை குண்டம் திருவிழா

/

பெருமாநல்லுாரில் நாளை குண்டம் திருவிழா

பெருமாநல்லுாரில் நாளை குண்டம் திருவிழா

பெருமாநல்லுாரில் நாளை குண்டம் திருவிழா


ADDED : மார் 25, 2024 12:56 AM

Google News

ADDED : மார் 25, 2024 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்;பெருமாநல்லுார் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நாளை பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர்; 650 போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவர்.

பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது.

கோவில் குண்டம் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நாளை (26ம் தேதி) அதிகாலை நடக்கிறது. அன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

பக்தர்கள் வரிசையாக நின்று அம்மனை தரிசிக்க தடுப்பு அமைக்கப்பட்டு பந்தல் போடப்பட்டுள்ளது. குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு ஏற்படுத்தப்பட்டு அங்கும் பந்தல் போடப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தை சுற்றி மின் விளக்கு, 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா, 30 இடங்களில் மொபைல் டாய்லெட் அமைக்க பட்டுள்ளது. கோவில் உள் வளாகத்தில் 10 இடங்களில் ராட்சத மின் விசிறி நிறுவப்பட்டுள்ளது.

பக்தர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்த திருப்பூர் ரோட்டில் பெருமாநல்லுார் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி எதிரிலும், அவிநாசி ரோட்டில் சவுமியா மருத்துவமனை எதிரிலும், நம்பியூர் ரோட்டில் லட்சுமி வாட்டர் சர்வீஸ் எதிரிலும், குன்னத்துார் ரோட்டில் எம்.எல்.ஆர்., திருமண மண்டபம் எதிரிலும், ஈரோடு ரோட்டில் ராபா ஹோண்டா ஷோரூம் அருகிலும், இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் எஸ்.பிக்கள் இருவர் தலைமையில், மூன்று டி.எஸ்.பி., 11 இன்ஸ்பெக்டர், 28 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், ஊர் காவல் படையினர் என 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

---

3 காலம்

பெருமாநல்லுார் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நாளை பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர்; பக்தர்கள் வரிசையாக வர தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

இன்று மதியம் முதல் நாளை மாலை வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் இருந்து, குன்னத்துார், ஈரோடு, கோபி என அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பூலுவபட்டி பிரிவில் இருந்து, நெருப்பெரிச்சல், வாவிபாளையம், கணக்கம்பாளையம் வழியாக விவசாயிகள் நினைவு ஸ்துாபி சென்று தேசிய நெடுஞ்சாலையை அடைய ஏற்பாடுகள் செய்துள்ளனர். நேற்று இரவு முதல், செவ்வாய்க்கிழமை மதியம் வரை திருப்பூர், நம்பியூர், செங்கப்பள்ளி, அவிநாசி, கோபி, ஆகிய ஊர்களில் இருந்து, 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.........








      Dinamalar
      Follow us