sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வேன் மீது கார் மோதல்; மண்டப உரிமையாளர் பலி

/

வேன் மீது கார் மோதல்; மண்டப உரிமையாளர் பலி

வேன் மீது கார் மோதல்; மண்டப உரிமையாளர் பலி

வேன் மீது கார் மோதல்; மண்டப உரிமையாளர் பலி


ADDED : பிப் 25, 2025 06:43 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; திருப்பூர் அடுத்த வஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 38; திருமண மண்டப உரிமையாளர். நேற்று மதியம், சீனிவாசனும், இவரது உறவினர் அஸ்வின், 24 என்பவரும், காரில் உடுமலை-யில் இருந்து பல்லடம் நோக்கி வந்தனர்.

அஸ்வின் காரை ஓட்ட, முன் பக்க சீட்டில் சீனிவாசன் அமர்ந்திருந்தார். பல்லடம் அருகே புள்ளியப்பம்பாளையம் அருகே, முன்னால் சென்று கொண்டிருந்த ஈச்சர் வேன் மீது கார் மோதியது.

இதில் சீனிவாசன் அதே இடத்தில் இறந்தார். காரை ஓட்டி வந்த அஸ்வின், காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காரில் பயணித்த இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்தத நிலையில், விபத்தின் போது 'ஏர் பேக்' விரிந்துள்ளது.

இருப்பினும், கார், அதிவேகமாக வந்ததால் அழுத்தம் தாங்காமல் 'ஏர் பேக்' வெடித்து கார் விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us