sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பறிமுதல் செய்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

/

பறிமுதல் செய்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

பறிமுதல் செய்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

பறிமுதல் செய்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு


ADDED : மார் 29, 2024 12:49 AM

Google News

ADDED : மார் 29, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி;அவிநாசி அடுத்த தெக்கலுாரில் உள்ள ஆலம்பாளையம் பிரிவில் தேர்தல் நிலையான கண்காணிப்பு 'சி' பிரிவு குழுவினர் வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகி தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தெக்கலுார் பகுதியைச் சேர்ந்த கனகராஜ், 47, என்பவர் டூவீலரில் வந்துள்ளார். அவரை சோதனை செய்தபோது முறையான ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரிய வந்தது.

இதனால், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்த பணத்தை அவிநாசி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதன்பின் வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, பறிமுதல் செய்த பணம் ஒப்படைக்கப்பட்டது.

இதில், முறையான ஆவணங்கள் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கான வங்கி கணக்குகளை கனகராஜ், வருமான வரித்துறையினரிடம் கொடுத்தார். விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட பணம் கனகராஜிடம், துணை தாசில்தார் அழகரசன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us