/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலிப்பயிராக ஆமணக்கு சாகுபடி தோட்டக்கலைத்துறை அட்வைஸ்
/
வேலிப்பயிராக ஆமணக்கு சாகுபடி தோட்டக்கலைத்துறை அட்வைஸ்
வேலிப்பயிராக ஆமணக்கு சாகுபடி தோட்டக்கலைத்துறை அட்வைஸ்
வேலிப்பயிராக ஆமணக்கு சாகுபடி தோட்டக்கலைத்துறை அட்வைஸ்
ADDED : ஆக 13, 2024 11:57 PM
உடுமலை:வேலிப்பயிர் அல்லது ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதால், முக்கிய பயிரில், நோய் தாக்குதல் வெகுவாக குறையும் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துறையினர் கூறியதாவது:
எந்த பயிர் சாகுபடி செய்தாலும், ஊடுபயிர், வரப்பு பயிர், வேலிப்பயிர், பொறி பயிர் என சில தாவரங்களை கட்டாயமாக அனைத்து விவசாயிகளும், பயிர் திட்டத்தில் சேர்க்க வேண்டும். கவர்ச்சி பயிராக ஆமணக்கு, பொறியல் தட்டை சாகுபடி செய்யலாம்.
ஆமணக்கு அகன்ற இலைப்பரப்பு கொண்டுள்ளதால், பயிர்களில் திடீர் தாக்குதல் செய்யும், புருட்டோனியா, பச்சைக்காய் புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகள், அசுவனி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சிகள் முதலியவற்றை ஈர்த்து அமர செய்யும்.
அதிகம் தாக்கப்பட்ட, ஆமணக்கு இலைகளை, தனியாக பிரித்து, முட்டை குவியல்களை எளிதாக அழிக்கலாம். இதனால், பூச்சி கொல்லி மருந்து தெளித்தல் தவிர்க்கப்படுவதுடன், நோய் தடுப்பு பணிகளும் எளிதாகும்.
அனைத்து காய்கறி பயிர்களுக்கு இடையிலும், ஆமணக்கு சாகுபடி செய்தால், பயிரின் நோய் தாக்குதல் குறைய வாய்ப்புள்ளது. ஆமணக்கு, பூசண வித்துகளை காற்றின் மூலம் பரவவிடாமல், தடுத்து, பயிருக்கு பாதிப்புகளை தவிர்க்கிறது.
ஆமணக்கு விதைகளிலிருந்து பெறப்படும், ஆமணக்கு எண்ணைக்கும் சந்தை வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.