/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.டி., கார்டு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.டி., கார்டு
ADDED : ஆக 30, 2024 10:41 PM

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்புகளை பரிசோதித்து, அடையாள அட்டைக்கு பரிந்துரைத்தனர். மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்ட அட்டை புதுப்பித்து கொடுக்கப்பட்டது. 54 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டையும்; 21 பேருக்கு அட்டை புதுப்பித்துக்கொடுக்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த்ராம்குமார், அடையாள அட்டை வழங்கினார்.
---
கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடந்தது.