ADDED : பிப் 22, 2025 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
மாவட்ட அலுவலர் வசந்த ராம்குமார் தலைமை வகித்தார். மருத்துவ நிபுணர்கள் மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்புகளை பரிசோதித்தனர். மாவட்டம் முழுவதுமிருந்து 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் உறவினர்கள், பாதுகாவலர்களுடன் பங்கேற்றனர். புதிதாக 46 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையும், 13 பேருக்கு புதுப்பித்தும் வழங்கப்பட்டது.