ADDED : ஆக 04, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பல்லடம் உழவர் சந்தையில், விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஷர்மிளா தலைமை வகித்தார். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க பல்லடம் வட்டார தலைவர் வேலுமணி, விவசாயிகள் அர்ஜூனன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், 40 விவசாயிகளுக்கு உழவர் சந்தை அட்டை வழங்கப்பட்டது. நிர்வாக அலுவலர்கள் செல்வராஜ், அண்ணாமலை, சிவமீனா ஆகியோர் பங்கேற்றனர்.