sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்டாப்பில் நின்றால் மழைநீர் தெறிக்கும்  

/

ஸ்டாப்பில் நின்றால் மழைநீர் தெறிக்கும்  

ஸ்டாப்பில் நின்றால் மழைநீர் தெறிக்கும்  

ஸ்டாப்பில் நின்றால் மழைநீர் தெறிக்கும்  


ADDED : ஆக 18, 2024 11:45 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குப்பை தேக்கம்

திருப்பூர், ஓம் சக்தி நகர் இரண்டாவது வீதியில், தேங்கியுள்ள குப்பைகளை அள்ள வேண்டும். கண்ணாடிகள் வீசியெறியப்படுகின்றன.

- சுப்பு, ஓம் சக்தி நகர். (படம் உண்டு)

கொசு ராஜ்ஜியம்

திருப்பூர், தோட்டத்துப்பாளையம், காமாட்சி அம்மன் கோவில் மேற்கு வீதி, மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்பதால், கொசுத்தொல்லை அதிகமாகிறது.

- முரளி, தோட்டத்துப்பாளையம். (படம் உண்டு)

துரத்தும் நாய்கள்

திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையத்தில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்திக் கடிக்கின்றன.

- செல்வராஜ், மீனம்பாறை. (படம் உண்டு)

கரடுமுரடு சாலை

ஊத்துக்குளி, சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சி, இரண்டாவது வார்டு, குளத்துப்பாளையத்தில் சாலை கரடுமுரடாக உள்ளது. ரோடு போட வேண்டும்.

- மோகன், சர்க்கார் பெரியபாளையம். (படம் உண்டு)

சாலை மோசம்

திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவில் ரோடு மோசமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். ரோடு போட வேண்டும்.

- தேவராஜன், ராக்கியாபாளையம் பிரிவு. (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- சங்கர்சதீஷ், ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)

தண்ணீர் தேக்கம்

திருப்பூர், அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி., தியேட்டர் ஸ்டாப்பில் மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் தேங்கி விடுகிறது. வாகனங்கள் வேகமாக செல்லும், ஸ்டாப்பில் நிற்பவர் மீது மழைநீர் தெறிக்கிறது.

- சங்கர், வளையங்காடு. (படம் உண்டு)






      Dinamalar
      Follow us