sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கணபதிபாளையத்தில் மரகத பூஞ்சோலை திறப்பு

/

கணபதிபாளையத்தில் மரகத பூஞ்சோலை திறப்பு

கணபதிபாளையத்தில் மரகத பூஞ்சோலை திறப்பு

கணபதிபாளையத்தில் மரகத பூஞ்சோலை திறப்பு


ADDED : ஆக 15, 2024 11:59 PM

Google News

ADDED : ஆக 15, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில், திருப்பூரில், உருவாக்கப்பட்ட 'மரகதப் பூஞ்சோலை' நேற்று, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது.

தமிழக அரசு, அமெரிக்க நிதியுதவி திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள, 17 ஆயிரம் கிராமங்களில் 'மரகதப் பூஞ்சோலை' அமைக்க திட்டமிட்டுள்ளது. இதில், 75 மரகத பூஞ்சோலைகளை, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பிரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில், கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட இடத்தில், திருப்பூர் வனத்துறை சார்பில், அமைக்கப்பட்ட மரகதப் பூஞ்சோலையும் திறக்கப்பட்டது.

கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், பொங்கலுார் ஊராட்சி தலைவர் குமார், திருப்பூர் வனத்துறை ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணா, பல்லடம் பிரிவு பாரஸ்டர் உமா மகேஸ்வரி, வனப்பணியாளர்கள், பெத்தாம்பாளையம் ஊராட்சி துவக்கப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர் மக்கள் பங்கேற்றனர்.

மொத்தம், 1.75 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இப்பூங்காவில், மலர் செடிகள், மரச்செடிகள், பழம் தரும் செடிகள் நடவு செய்யப்பட்டு; நடைபயிற்சி மேற்கொள்ள பிரத்யேக தளம், குழந்தைகள் பூங்கா, பொதுமக்கள் அமர்ந்து இளைபாறுவதற்கான அறை, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us