sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கரும்பிலும் ஊடுபயிர் பராமரிக்கலாம்! விவசாயிகளுக்கு அட்வைஸ்

/

கரும்பிலும் ஊடுபயிர் பராமரிக்கலாம்! விவசாயிகளுக்கு அட்வைஸ்

கரும்பிலும் ஊடுபயிர் பராமரிக்கலாம்! விவசாயிகளுக்கு அட்வைஸ்

கரும்பிலும் ஊடுபயிர் பராமரிக்கலாம்! விவசாயிகளுக்கு அட்வைஸ்


ADDED : ஏப் 15, 2024 11:51 PM

Google News

ADDED : ஏப் 15, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;கரும்பு சாகுபடியில், ஊடுபயிர் பராமரிப்பதால், மண்ணில் சத்துகளை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, கோவை வேளாண் பல்கலை., யினர் அறிவுறுத்தியுள்ளனர்.

உடுமலை ஏழு குள பாசனம் மற்றும் அமராவதி ஆயக்கட்டு பாசனத்தில் கரும்பு பிரதான சாகுபடியாக உள்ளது. இச்சாகுபடியில், ஊடுபயிர்களையும் சாகுபடி செய்யலாம்.

'தண்ணீர் தட்டுப்பாட்டு இல்லாத பகுதிகளில், சோயா மொச்சை, உளுந்து அல்லது பச்சைப்பயறு போன்ற பயிர்களை கரும்பு நடவுசால் மேடுகளின் நடுவில், ஒரு வரிசையில் விதைக்கலாம்.

கொளுஞ்சி அல்லது சணப்பை ஊடுபயிராக நடவுசால் மேடுகளில் விதைத்த, 45ம் நாள் பிடுங்கி, கரும்பு வரிசைக்கு அருகே வைத்து, மண் அணைப்பதின் வாயிலாக மண்ணின் சத்துக்கள் அதிகரிப்பதோடு கரும்பில் அதிக மகசூல் பெறலாம்.

மேலும், கோ1 என்ற சோயா மொச்சை ஊடுபயிர் செய்வதால், கரும்பின் மகசூல் குறையாமல் சோயா மொச்சையிலிருந்து ஒரு ெஹக்டேருக்கு, 800 கிலோ வரையில் மகசூல் எடுக்கலாம்.

கரணை நடவுக்கு முன், கடைசி உழவின் பொழுது தென்னை நார்க்கழிவு, ெஹக்டேருக்கு, 25 டன் என்றளவில் இடுவதுடன், காய்ந்த சோகைகளை 5வது மாதம் உரித்து கரும்பு வரிசைக்கு இடையே பரப்பினால், வறட்சியை சமாளிக்க முடியும்,' என கோவை வேளாண் பல்கலை., விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us