sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொரியல் தட்டை சாகுபடியில் ஆர்வம்

/

பொரியல் தட்டை சாகுபடியில் ஆர்வம்

பொரியல் தட்டை சாகுபடியில் ஆர்வம்

பொரியல் தட்டை சாகுபடியில் ஆர்வம்


ADDED : பிப் 25, 2025 10:37 PM

Google News

ADDED : பிப் 25, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,; குறைந்த தண்ணீரிலும் செழிக்கும் பொரியல் தட்டை சாகுபடியில், ஈடுபட உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உடுமலை பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகளில், 60 நாட்களில் பயனுக்கு வரும் பொரியல் தட்டை சாகுபடியிலும், தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முன்பு, பழநி, ஒட்டன்சத்திரம் சுற்றுப்பகுதிகளில் பொரியல் தட்டை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வந்தது.

உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி, கேரளா , மூணாறு, மறையூர் பகுதிகளுக்கும், பொரியல் தட்டை அதிகளவு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களிலேயே கொள்முதல் செய்து வருகின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது: பொரியல் தட்டை அனைத்து வகை நிலங்களிலும், அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம். குளிர் சீதோஷ்ண நிலை உள்ள உடுமலை பகுதியில், நல்ல மகசூல் கிடைக்கிறது.

விதைப்பு செய்த, 50வது நாள் முதல் காய்கள் தினமும் பறிக்கலாம். தினமும், ஏக்கருக்கு, 100 முதல் 150 கிலோ வரை கிடைக்கிறது. ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது; 10 டன் வரை மகசூல் கிடைக்கிறது.

வழக்கமாக, ஓணம் சீசனில், பொரியல் தட்டைக்கு நல்ல விலை கிடைக்கும். தொழிலாளர் தேவை குறைவாக உள்ளதால், இரு சீசன்களில் பயிரிடுகிறோம்.

இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us