/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜமாபந்தி துவங்குகிறது; மனு அளிக்கலாம், மக்களே!
/
ஜமாபந்தி துவங்குகிறது; மனு அளிக்கலாம், மக்களே!
ADDED : ஜூன் 15, 2024 12:50 AM

திருப்பூர்;வருவாய்த்துறையின் ஜமாபந்தி என்கிற பாரம்பரிய திருவிழா, திருப்பூரில் வரும் 20ல் துவங்கி நடைபெற உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், வரும் 20ம் தேதி முதல், ஜமாபந்தி(வருவாய்த்துறை வரவு-செலவு கணக்கு தணிக்கை) துவங்கி நடைபெறுகிறது. மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகா அலுவலகங்களிலும், கலெக்டரால் நியமிக்கப்படும் அலுவலரால், ஜமாபந்தி நடத்தப்படுகிறது.
* காங்கயம் தாலுகா: காங்கயம் உள்வட்டத்துக்கு, வரும் 20ம் தேதி; ஊதியூர் உள்வட்டத்துக்கு 21ம் தேதி; நத்தக்காடையூருக்கு 25ம்; வெள்ளகோவிலுக்கு 26ம் தேதி ஜமாபந்தி நடைபெறுகிறது.
* ஊத்துக்குளி தாலுகா: குன்னத்துார் உள்வட்டத்துக்கு 20ம் தேதி; ஊத்துக்குளி உள்வட்டத்துக்கு 21ம் தேதி.
* பல்லடம் தாலுகா: பல்லடம் உள்வட்டத்துக்கு 20ம் தேதி; கரடிவாவி 21ம் தேதி; சாமளாபுரம் 25 ம் தேதி; பொங்கலுார் உள்வட்டம் 26ம் தேதி.
* திருப்பூர் வடக்கு தாலுகா: திருப்பூர் வடக்கு உள்வட்டம், 20ம் தேதி; வேலம்பாளையம், 21ம் தேதி.
* திருப்பூர் தெற்கு தாலுகா: திருப்பூர் தெற்கு உள்வட்டம், 20ம் தேதி; நல்லுார், 21ம் தேதி; தெற்கு அவhனாசி பாளையம் 25ம் தேதி.
* தாராபுரம் தாலுகா: தாராபுரம் உள்வட்டம், 20ம் தேதி; அலங்கியம், 21ம் தேதி; மூலனுார் உள்வட்டம், 25ம் தேதி;கன்னிவாடி, 26ம் தேதி; குண்டடம், 27ம் தேதி; பொன்னாபுரம், 28ம் தேதி; சங்கராண்டாம்பாளையம், ஜூலை 2ம் தேதி.
* மடத்துக்குளம் தாலுகா: மடத்துக்குளம் உள்வட்டம், வரும் 20ம் தேதி; துங்காவி 21ம் தேதி.
* உடுமலை தாலுகா: உடுமலை உள்வட்டம், 20ம் தேதி; குறிச்சிக்கோட்டை, 21ம் தேதி; பெரியவாளவாடி 25ம் தேதி; குடிமங்கலம் 26ம் தேதி; பெதப்பம்பட்டி, 27 ம் தேதி.
* அவிநாசி தாலுகா: சேவூர் உள்வட்டம், 20ம் தேதி; அவிநாசி மேற்கு உள்வட்டத்துக்கு 21ம் தேதி; அவிநாசி கிழக்கு வட்டத்துக்கு 25ம் தேதி; பெருமாநல்லுாருக்கு 26ம் தேதி ஜமாபந்தி நடைபெறுகிறது.
ஜமாபந்தி நாட்களில், அந்தந்த கிராம மக்கள் பங்கேற்று அதிகாரிகளிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை அளித்து, உடனடி தீர்வு பெறலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.