sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 நீதிபதிகள் பதவி உயர்வு: திருப்பூரில் 2 பேர் தேர்வு

/

 நீதிபதிகள் பதவி உயர்வு: திருப்பூரில் 2 பேர் தேர்வு

 நீதிபதிகள் பதவி உயர்வு: திருப்பூரில் 2 பேர் தேர்வு

 நீதிபதிகள் பதவி உயர்வு: திருப்பூரில் 2 பேர் தேர்வு


ADDED : மே 04, 2024 11:12 PM

Google News

ADDED : மே 04, 2024 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:தமிழகம் முழுவதும் சீனியர் நீதிபதிகள் 17 பேர் மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருவர் இடம் பெற்றுள்ளனர்.

பொதுத் துறை (தனி 'ஏ' பிரிவு) அரசு செயலர் நந்தகுமார் பிறப்பித்த உத்தரவில், தமிழகம் முழுவதும் நீதித்துறையில் பணியாற்றும் மூத்த நீதிபதிகள், 17 பேர் மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

காலியாக உள்ள பணியிடங்களில் அவர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். சென்னை ஐகோர்ட் பதிவாளர் பரிந்துரைகளை ஏற்று இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் இருவர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவராகப் பணியாற்றும் புகழேந்தி, அவிநாசி சார்பு நீதிபதி சுரேஷ்குமார் ஆகிய இருவர் மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கான பணியிடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.






      Dinamalar
      Follow us