/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருப்பராயசுவாமி கோவில் பொங்கல் விழா கோலாகலம்
/
கருப்பராயசுவாமி கோவில் பொங்கல் விழா கோலாகலம்
ADDED : மே 01, 2024 11:40 PM

அனுப்பர்பாளையம் : திருப்பூர், அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையம்புதுாரில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ கருப்பராய சுவாமி, ஸ்ரீகன்னிமார் சுவாமி கோவில்களில், பொங்கல் விழா கடந்த, 24ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணி முதல் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நுாற்றுக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு, சுவாமி தரிசனம்செய்தனர். மாலை 4:00 மணிக்கு ஸ்ரீ கருப்பராய சுவாமி, மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில், இன்று மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8:00 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொங்கல் விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

