/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருவிதாங்கூர் சமஸ்தான மகாராணிக்கு பாராட்டு
/
திருவிதாங்கூர் சமஸ்தான மகாராணிக்கு பாராட்டு
ADDED : ஜூலை 08, 2024 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:அவிநாசி அருகே புதுப்பாளையத்தில் உள்ள ரேவதி நர்சிங் கல்லுாரியில், திருவிதாங்கூர் சமஸ்தான மகாராணிகவுரி லட்சுமி பாயிக்கு பாராட்டு விழா மற்றும் புத்தகம் வாசிப்பு விழிப்புணர்வு ஆகியன நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி நிர்வாக அறங்காவலர் ரேவதி முன்னிலை வகித்தார். கல்லுாரி நிர்வாக இயக்குனர் டாக்டர் ஹரி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் சுபிகிருஷ்ணன் மற்றும் கல்லுாரி நிர்வாக அலுவலர் டாக்டர் எமரால்டு, பொன்னையன் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, திருவிதாங்கூர் சமஸ்தான மகாராணி கவுரி லட்சுமி பாயிக்கு, அவரின் சமுதாய சேவையை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

