sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்

/

முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்

முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்

முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்


ADDED : ஏப் 27, 2024 01:28 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை அருகே, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ஓம் சக்தி கோஷம் முழங்க, முத்தலாம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று கோலாகலமாக நடந்தது.

உடுமலை அருகே, பூலாங்கிணறு முக்கோணத்தில், முத்தாலம்மன் கோவில் உள்ளது. கோவிலில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விநாயகர், முத்தாலம்மன் மற்றும் நவக்கிரகங்கள் ஆகிய சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டன.

கும்பாபிேஷக விழா மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் கடந்த 22ல், துவங்கியது. கடந்த, 23ல், விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி, மகா லட்சுமி ேஹாமம் நடந்தது.

தொடர்ந்து தீர்த்த ஊர்வலம், முளைப்பாலிகை அழைத்து வந்து, பவுர்ணமி பூஜை நடைபெற்றது. நேற்று காலை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

காலை, 9:00 மணிக்கு மேல், கலசம் புறப்படுதல், அம்மன் கோபுர கலசம் கும்பாபிேஷகம் நடந்தது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் 'ஓம் சக்தி' கோஷம் முழங்க கும்பாபிேஷக விழா கோலாகலமாக நடந்தது.

பின்னர், அம்மனுக்கு மகா அபிேஷகம், தசதரிசனம், மகா தீபாராதனைக்கு பிறகு, பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us