/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஐயப்பன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
ஐயப்பன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : ஆக 29, 2024 10:56 PM

பல்லடம்: பல்லடம் சந்தைப்பேட்டை ஸ்ரீஐயப்பன் கோவில், 1987ம் ஆண்டு, ராஜகுரு சங்கரய்யரால் முதன்முறையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள் குழுவினரால் பராமரிக்கப்பட்டு வரும் இக்கோவில், 2011ல், கும்பாபிஷேகம் நடந்தது.
ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை மாத மண்டல பூஜை மற்றும் 108 சங்கு கலச அபிஷேகம் இக்கோவிலில் பிரசித்தி பெற்றது. சித்திரை விஷூ, மகரஜோதி மற்றும் மாதாந்திர உத்திர நட்சத்திர நாளில், ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கும். ஐயப்ப பக்தர்களின் முயற்சியால், 13 ஆண்டுக்குப் பின் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.
இன்று காலை நான்காம் கால யாக பூஜையும், தொடர்ந்து, 8:30 மணிக்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள் மற்றும் அருள்மலை தோரணவாவி குமார சிவஞான சிவாச்சாரியார் ஆகியோர் சர்வசாதகம் செய்து கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.