/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.100 கோடி மதிப்பு நிலம் மீட்பு
/
ரூ.100 கோடி மதிப்பு நிலம் மீட்பு
ADDED : ஆக 06, 2024 11:36 PM

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு உட்பட்டது அலகுமலை கிராமம்.
அங்குள்ள அழகாபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம், க.ச., எண் 387ல் 16.84 ஏக்கர் உள்ளது. முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான, (க.ச., எண்:397/2'ஏ'), 2.49 ஏக்கர் மற்றும் (397/2 'சி') 2.26 ஏக்கர் என, 21.59 ஏக்கர் நிலம் நேற்று மீட்கப்பட்டது.
ஹிந்து அறநிலையத்துறை துணை கமிஷனர் (சரிபார்ப்பு) ஹர்சினி தலைமையில், தனி தாசில்தார் (கோவில் நிலம்) ரவீந்திரன், செயல் அலுவலர் சரவணபவன், வி.ஏ.ஓ., சிவசங்கர் முன்னிலையில், நேற்று முன்தினம் கோவில் நிலம் சுவாதீனம் எடுக்கப்பட்டு, அறிவிப்பு பலகை நட்டு வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட, 21.59 ஏக்கர் நிலத்தின் மதிப்பு, 100 கோடி ரூபாய் என்று, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.