/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்ட பணிகள் குழு விழிப்புணர்வு முகாம்
/
சட்ட பணிகள் குழு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 26, 2024 01:21 AM
உடுமலை;உடுமலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், பள்ளி மாணவியருக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகளின் பாதுகாப்பு, போக்சோ சட்டம், அடிப்படைச் சட்டங்கள், குழந்தை திருமணத் தடைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான மணிகண்டன் தலைமை வகித்தார். வக்கீல்கள் செந்தில்குமார், முகமது நிசார் பாபு, ஸ்ரீமதி, பட்டதாரி ஆசிரியைகள் விஜயலட்சுமி, கீர்த்திகா ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீதிபதி மணிகண்டன் பேசியதாவது:
மாணவர்கள் படிப்பை தவிர வேறு, பயன்பாட்டிற்கு மொபைல்போன் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும். உரிய வயது அடையும் வரை, சமூக வலை தளங்களை பயன்படுத்த வேண்டாம். அனைவரும் சமூகத்தில் தங்களை சுற்றி நடக்கும் குற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
18 வயது பூர்த்தி அடையாமலும், ஓட்டுநர் உரிமம் பெறாமலும் வாகனங்களை இயக்க கூடாது. ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடனே, '1098' என்ற குழந்தைகள் பாதுகாப்பு எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.

