sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சட்ட பணிகள் குழு விழிப்புணர்வு முகாம்

/

சட்ட பணிகள் குழு விழிப்புணர்வு முகாம்

சட்ட பணிகள் குழு விழிப்புணர்வு முகாம்

சட்ட பணிகள் குழு விழிப்புணர்வு முகாம்


ADDED : ஆக 26, 2024 01:21 AM

Google News

ADDED : ஆக 26, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், பள்ளி மாணவியருக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகளின் பாதுகாப்பு, போக்சோ சட்டம், அடிப்படைச் சட்டங்கள், குழந்தை திருமணத் தடைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான மணிகண்டன் தலைமை வகித்தார். வக்கீல்கள் செந்தில்குமார், முகமது நிசார் பாபு, ஸ்ரீமதி, பட்டதாரி ஆசிரியைகள் விஜயலட்சுமி, கீர்த்திகா ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீதிபதி மணிகண்டன் பேசியதாவது:

மாணவர்கள் படிப்பை தவிர வேறு, பயன்பாட்டிற்கு மொபைல்போன் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும். உரிய வயது அடையும் வரை, சமூக வலை தளங்களை பயன்படுத்த வேண்டாம். அனைவரும் சமூகத்தில் தங்களை சுற்றி நடக்கும் குற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

18 வயது பூர்த்தி அடையாமலும், ஓட்டுநர் உரிமம் பெறாமலும் வாகனங்களை இயக்க கூடாது. ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடனே, '1098' என்ற குழந்தைகள் பாதுகாப்பு எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு, பேசினார்.






      Dinamalar
      Follow us