sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

8.59 லட்சம் வீடுகளில் கால்நடை கணக்கெடுப்பு

/

8.59 லட்சம் வீடுகளில் கால்நடை கணக்கெடுப்பு

8.59 லட்சம் வீடுகளில் கால்நடை கணக்கெடுப்பு

8.59 லட்சம் வீடுகளில் கால்நடை கணக்கெடுப்பு


ADDED : பிப் 24, 2025 09:40 PM

Google News

ADDED : பிப் 24, 2025 09:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

திருப்பூர் மாவட்டத்தில், 8.59 லட்சம் வீடுகளில் கால்நடை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணைந்து, 21வது கால்நடை கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். இதுவரை, 85 சதவீதம் அளவுக்கு இப்பணி நிறைவு பெற்றிருக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக, கால்நடை வளர்ப்பு பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், கடந்த, அக்., மாதம் துவங்கிய கால்நடை கணக்கெடுப்பு பணி, இன்றுடன் (25ம் தேதி) நிறைவு பெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலை என மூன்று கோட்டங்கள் உள்ளன.

திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் டாக்டர் பிரகாசம் கூறியதாவது: மாவட்டம் முழுக்க, 8 லட்சத்து 59 ஆயிரத்து 251 வீடுகளில் கால்நடை கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடுகள் அல்லாத வியாபார நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களிலும், கால்நடை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. 247 கால்நடை கணக்கெடுப்பாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட அனைத்து கால்நடைகள் துவங்கி, விவசாய உபகரணங்களும் கணக்கெடுக்கப்படும். இதுவரை, 85 சதவீதம் அளவுக்கு கணக்கெடுப்புப்பணி நிறைவு பெற்றிருக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us