sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இடம் அளவீடு தாமதம்; கால்வாய் பணி முடக்கம்

/

இடம் அளவீடு தாமதம்; கால்வாய் பணி முடக்கம்

இடம் அளவீடு தாமதம்; கால்வாய் பணி முடக்கம்

இடம் அளவீடு தாமதம்; கால்வாய் பணி முடக்கம்


ADDED : மே 27, 2024 01:05 AM

Google News

ADDED : மே 27, 2024 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி, 26வது வார்டு, எம்.ஜி.ஆர்., நகர் முதல் அணைப்பாளையம் வரை 1.5 கி.மீ., துாரத்துக்கு சாக்கடை கால்வாய் மற்றும் ரோடு வசதி இல்லாமல் இருந்தது. மாநகராட்சி சார்பில், சாக்கடை கால்வாய் அமைக்க 45 லட்சம் மற்றும் ரோடு அமைக்க 70 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அதில் 80 மீட்டர் துாரம் கால்வாய் கட்டும் பணி கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ரோடு போடும் பணியும் நடைபெறவில்லை. கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. மண் ரோடு என்பதால், சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப் படுகிறது. துர்நாற்றம் வீசுகிறது. ரோட்டில் செல்ல முடியவில்லை.

உதவிப்பொறியாளர் கூறுகையில், ''விடுபட்ட பகுதியில், உள்ள இடத்தை அளவீடு செய்ய வேண்டி உள்ளது. நில அளவையர் அளவீடு செய்து கொடுத்ததும், விடுபட்ட பகுதியில் சாக்கடை கால்வாய் பணி நடைபெறும். தொடர்ந்து, ரோடு பணி நடைபெறும்'' என்றார்.






      Dinamalar
      Follow us