sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாளை மகா சிவராத்திரி விழா; சிவாலயங்களில் முன்னேற்பாடு 

/

நாளை மகா சிவராத்திரி விழா; சிவாலயங்களில் முன்னேற்பாடு 

நாளை மகா சிவராத்திரி விழா; சிவாலயங்களில் முன்னேற்பாடு 

நாளை மகா சிவராத்திரி விழா; சிவாலயங்களில் முன்னேற்பாடு 


ADDED : பிப் 25, 2025 07:00 AM

Google News

ADDED : பிப் 25, 2025 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி நாளில், சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு தரிசனம் நடப்பது வழக்கம். மாலை துவங்கி, விடியற்காலை வரை, நான்கு கால சிவராத்திரி பூஜைகள் நடைபெறும்.

திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சிவராத்திரி அன்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதற்காக, கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன. மாலை, 6:30 மணிக்கு முதல் கால அபிேஷக மற்றும் அலங்காரம்; இரவு, 9:00 மணி, நள்ளிரவு, 12:30 மணி, அதிகாலை, 4:00 மணி ஆகிய நேரங்களில் மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கின்றன. குறிப்பாக, மூன்றாவது காலத்தில் நடைபெற உள்ள, மகாலிங்கோத்பவர் அபிேஷகத்தை பார்ப்பது சிறப்பு வாய்ந்தது. வரும், 27ம் தேதி காலை, பள்ளியெழுச்சி பூஜையுடன் சிவராத்திரி பூஜைகள் நிறைவு பெறும்.

 திருப்பூர் எஸ்.பெரியபாளையம் ஸ்ரீஆவுடைநாயகி உடனமர் சுக்ரீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழா நாளை நடைபெற உள்ளது. மாலை 6:00 மணிக்கு துவங்கி, நான்கு கால சிவராத்திரி அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் விமரிசையாக நடைபெறும். சிவாச்சாரியார்களும், பக்தர்களும், இரவு முழுவதும் கண்விழித்து, தேவாரம், திருவாசகம் உட்பட, பன்னிரு திருமுறைகளை பாராயணம் செய்து, சிவபெருமானை தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us