/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம்; ஒரு வாரத்தில் ரூ.95.76 லட்சத்திற்கு விற்பனை
/
விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம்; ஒரு வாரத்தில் ரூ.95.76 லட்சத்திற்கு விற்பனை
விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம்; ஒரு வாரத்தில் ரூ.95.76 லட்சத்திற்கு விற்பனை
விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம்; ஒரு வாரத்தில் ரூ.95.76 லட்சத்திற்கு விற்பனை
ADDED : பிப் 21, 2025 11:01 PM

உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளம் வரத்து அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில், 391 டன் மக்காச்சோளம் இ-நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளம் வரத்து அதிகரித்துள்ளது.
விவசாயிகள் அறுவடை செய்யும் மக்காச்சோளத்தை, உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து, உலர் களங்களில் காய வைத்து விற்பனைக்கு தயார் செய்கின்றனர்.
தினமும், இ-நாம் திட்டத்தின் கீழ், மக்காச்சோளம் ஏலம் நடக்கிறது. கடந்த, 14ம் தேதி முதல், நேற்றுமுன்தினம் வரை, 71 விவசாயிகளின், 391.140 டன் மக்காச்சோளம் இ-நாம் திட்டத்தின் கீழ் ஏலம் விடப்பட்டது. ஏராளமான நிறுவனங்கள், வியாபாரிகள் பங்கேற்ற நிலையில்,ஒரு குவிண்டால் மக்காச்சோளம், ரூ.2,400 முதல், ரூ.2,475 வரை ஏலம் போனது. இதன் மதிப்பு, 95 லட்சத்து, 76 ஆயிரத்து, 391 ரூபாயாகும்.
திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கூறுகையில்,'' உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் மக்காச்சோளம், கொப்பரை, மல்லி உள்ளிட்ட விளை பொருட்களை உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலுள்ள உலர் களங்களில் காய வைத்து, இ-நாம் திட்டத்தின் கீழ் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், '' என்றனர்.