sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நான்கு வழிப்பாதையாகிறது மங்கலம் ரோடு

/

நான்கு வழிப்பாதையாகிறது மங்கலம் ரோடு

நான்கு வழிப்பாதையாகிறது மங்கலம் ரோடு

நான்கு வழிப்பாதையாகிறது மங்கலம் ரோடு


ADDED : ஏப் 28, 2024 01:39 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள ரோடுகள், கடந்த 10 ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டன. ரோடு விரிவாக்க பணியில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, மங்கலம் ரோடு மேம்பாட்டு பணி அதிகம் நடக்கவில்லை.

பெரியாண்டிபாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் மட்டும், ரோடு நான்கு வழிச்சாலையாக அகலம் செய்யப்பட்டிருந்தது. பாரப்பாளையம் முதல், பெரியாண்டிபாளையம் வரையிலான பகுதியை, நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் பணி நடந்து வருகிறது. ரோட்டோரம் இருந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி, ரோடு விரிவாக்க பணி நடந்து வருகிறது.

ரோட்டின் இருபுறமும், குழி தோண்டி, கான்கிரீட் கலவை கொண்டு மேம்படுத்தப்பட்டது. பிறகு, முழு அகலத்தில் தார்ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, மையத்தடுப்புகள் தற்காலிகமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

குமரன் கல்லுாரி அருகே இருந்த, பழைய இரும்பு மையத்தடுப்பு அகற்றி, புதிய கான்கிரீட் டிவைடர் வைக்கப்பட உள்ளது. நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், ரோடு நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுகிறது.

இதேபோல், மாநகராட்சி அலுவலகம் முதல், பாரப்பாளையம் வரையிலான பகுதியிலும், ரோட்டை விரிவாக்கம் செய்து, போக்குவரத்து நெரிசலை தீர்க்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us