/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்தி கோவிலில் பக்தர்களுக்கு 'மேட்'
/
திருமூர்த்தி கோவிலில் பக்தர்களுக்கு 'மேட்'
ADDED : மே 03, 2024 11:14 PM
உடுமலை:உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக தரை விரிப்பு அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை அருகே திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளி வரும் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மேலும், மலை மேல் பஞ்சலிங்கம் அருவியும், திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், மீன்வளர்ச்சித்துறையினர் வண்ணமீன் பூங்கா என, ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது.
தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வந்து செல்லும் நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக, பக்தர்கள் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வருவதற்கும், சுற்றுப்பிரகாரம் சுற்றி வருவதற்கும், கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பக்தர்கள் வசதிக்காக, அறநிலையத்துறை சார்பில் 200 மீட்டர் நீளத்திற்கு கோவில் வளாகம் முழுவதும் தரைவிரிப்பு (மேட்) விரிக்கப்பட்டுள்ளது.