sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மனதை ஒருநிலைப்படுத்தும் யோகா மாணவர்களுக்கும் அவசியம்

/

மனதை ஒருநிலைப்படுத்தும் யோகா மாணவர்களுக்கும் அவசியம்

மனதை ஒருநிலைப்படுத்தும் யோகா மாணவர்களுக்கும் அவசியம்

மனதை ஒருநிலைப்படுத்தும் யோகா மாணவர்களுக்கும் அவசியம்


ADDED : ஆக 03, 2024 05:48 AM

Google News

ADDED : ஆக 03, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: மாணவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்த, அரசுப்பள்ளிகளில் யோகா தொடர் பயிற்சியாக வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களை மனதளவில் ஒருநிலைப்படுத்தவும், கல்வி மற்றும் இணை செயல்பாடுகளில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும்,அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு யோகா பயிற்சி சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது.

நாளடைவில் பயிற்சிக்கான முக்கியத்துவம் குறைந்து, தற்போது ஒரு சில பள்ளிகளில் மட்டுமே ஆசிரியர்களின் விருப்ப அடிப்படையில், மாணவர்களுக்கு யோகா மற்றும் தியான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மனதளவில் தங்களுக்கான பலவித பாதிப்புகளால் தவறான வழிகளில் செல்வது, வன்முறையில் ஈடுபடுவது, கவனச்சிதறல் என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

மாணவர்களின் சிந்தனையை மேம்படுத்துவதற்கும், மன ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கும், யோகா மற்றும் தியான பயிற்சிகளும், கல்வி இணைசெயல்பாடுகளின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். இதற்கான முறையான நடவடிக்கையை, அரசு எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

உளவியல் ரீதியாகவும், குடும்ப சூழ்நிலையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும், யோகா பயிற்சி மிகவும் பயனுள்ள ஒன்று. இருப்பினும் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் உள்ளது.

இப்பயிற்சிகளில் பங்கேற்க, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், கல்வித்துறை போட்டிகளை நடத்த வேண்டும். மீண்டும் பள்ளிகளில் யோகா பயிற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us