sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

செப்., 4ல் சர்வதேசப் பின்னலாடை கண்காட்சி துவக்கம் - புதிய பேஷன்; பசுமையான எதிர்காலம்! 'சுற்றுச்சூழல் கோட்பாடு' பிரதான இடம் வகிக்கும்

/

செப்., 4ல் சர்வதேசப் பின்னலாடை கண்காட்சி துவக்கம் - புதிய பேஷன்; பசுமையான எதிர்காலம்! 'சுற்றுச்சூழல் கோட்பாடு' பிரதான இடம் வகிக்கும்

செப்., 4ல் சர்வதேசப் பின்னலாடை கண்காட்சி துவக்கம் - புதிய பேஷன்; பசுமையான எதிர்காலம்! 'சுற்றுச்சூழல் கோட்பாடு' பிரதான இடம் வகிக்கும்

செப்., 4ல் சர்வதேசப் பின்னலாடை கண்காட்சி துவக்கம் - புதிய பேஷன்; பசுமையான எதிர்காலம்! 'சுற்றுச்சூழல் கோட்பாடு' பிரதான இடம் வகிக்கும்


UPDATED : ஆக 27, 2024 03:03 AM

ADDED : ஆக 26, 2024 11:26 PM

Google News

UPDATED : ஆக 27, 2024 03:03 AM ADDED : ஆக 26, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:சர்வதேச பின்னலாடை கண்காட்சியான, 51வது 'இந்தியா நிட்பேர்' (ஐ.கே.எப்.,) கண்காட்சி, செப்., 4ல் துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.

திருப்பூர் ஐ.கே.எப்., அசோசியேஷன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், ஆயத்த ஆடைஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் ஆண்டுக்கு இருமுறை, ஐ.கே.எப்., கண்காட்சி நடத்தப்படுகிறது. திருமுருகன்பூண்டியில் உள்ள, ஐ.கே.எப்., வளாகத்தில், ஆறு மாத இடைவெளியில், கண்காட்சி நடத்தப்படுகிறது.

அதன்படி, வசந்தகால ஆடைகளுக்கான, 51வது 'இந்தியா நிட்பேர்' சர்வதேச பின்னலாடை கண்காட்சி, வரும் செப்., 4ம் தேதி துவங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள கண்காட்சியில், கோடை் மற்றும் குளிர்கால ஆர்டர்களுக்கான சிறப்பு வாய்ந்த ஆடைகள், 'பேப்ரிக்' துணி ரகங்கள், ஆடை உற்பத்திக்கான 'அசசரீஸ்', ஆயத்த ஆடைகள், நுாலிழைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

ஒவ்வொரு கண்காட்சியும், ஒவ்வொரு ஜவுளி தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு நடத்தப்படுகிறது. அதன்படி, உலக அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற கோட்பாட்டை கருத்தில்கொண்டு, 51வது கண்காட்சி நடத்தப்படுகிறது. இது, பசுமை சார் உற்பத்தி அடிப்படையிலான, புதிய பேஷனை கட்டமைக்கும் என, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பசுமை சார் உற்பத்தி அடிப்படையிலான, புதிய பேஷனை கட்டமைக்கும் என, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக வாய்ப்பு அள்ளலாம்

இன்றைய உலகமே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை எதிர்நோக்கியுள்ளன. வளர்ந்த நாடுகள், ஜவுளி இறக்குமதி செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மறுசுழற்சி மற்றும் வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியில், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி கேந்திரம் முன்னோடியாக மாறியுள்ளது. உலக நாடுகள் விரும்பும் வகையில், பசுமை சார் உற்பத்தி மற்றும் வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்த, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், 'இந்தியா நிட்பேர்' கண்காட்சியில் பயன்பெற வேண்டும். மறுசுழற்சி மற்றும் பசுமை சார் உற்பத்தி தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில், உலக அளவில் திருப்பூர் நகரம் புகழ்பெற்று விளங்குகிறது. திருப்பூரில் நடக்கும், 51வது இந்தியா நிட்பேர் கண்காட்சியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், வர்த்தக முகமைகள் பங்கேற்கின்றன. எனவே, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், கண்காட்சியில் பங்கேற்று, புதிய வர்த்தக வாய்ப்புகளை அள்ளலாம்.- சக்திவேல், ஐ.கே.எப்., தலைவர்.








      Dinamalar
      Follow us