sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அங்கன்வாடிகளில் ஊட்டச்சத்து மாத விழா வீட்டுத்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு

/

அங்கன்வாடிகளில் ஊட்டச்சத்து மாத விழா வீட்டுத்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு

அங்கன்வாடிகளில் ஊட்டச்சத்து மாத விழா வீட்டுத்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு

அங்கன்வாடிகளில் ஊட்டச்சத்து மாத விழா வீட்டுத்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு


ADDED : செப் 17, 2024 04:40 AM

Google News

ADDED : செப் 17, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: அங்கன்வாடி மையங்களில் நடக்கும் ஊட்டச்சத்து மாத விழாவில், வீட்டுத்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் செப்., மாதம் முழுவதும், 'போஷன் மா' என்ற தலைப்பில் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுகிறது.

சமூக நலத்துறையின் சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக, குழந்தைகள், வளர் இளம் பருவப்பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தின் அவசியத்தை உணர்த்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து மாதம் முழுவதும் நடத்தப்படுகிறது.

உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளத்தில், இவ்விழா கடந்த 1ம் தேதி முதல் துவங்கியது. உடுமலையில், 138, குடிமங்கலத்தில் 75 மற்றும் மடத்துக்குளத்தில், 77 மையங்களும் உள்ளன.

ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான எடை உயரம் எடுத்தல் முகாம் நடத்துவது, கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

நடப்பாண்டுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மையங்களில் நடக்கிறது.

அங்கன்வாடி பணியாளர்கள் கூறியதாவது:

தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவம், கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு சாப்பிடுவது என அங்கன்வாடி மையங்களை சுற்றியுள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

நடப்பாண்டில் வீட்டுத்தோட்டம் அமைப்பது, இயற்கையான முறையில் காய்கறி வளர்ப்பு, மூலிகை செடி வளர்ப்பு குறித்தும், குழந்தைகளின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us