sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பூங்காவில் கஞ்சா விற்பனை: ஒடிசா வாலிபர்கள் கைது

/

பூங்காவில் கஞ்சா விற்பனை: ஒடிசா வாலிபர்கள் கைது

பூங்காவில் கஞ்சா விற்பனை: ஒடிசா வாலிபர்கள் கைது

பூங்காவில் கஞ்சா விற்பனை: ஒடிசா வாலிபர்கள் கைது


ADDED : மார் 21, 2024 11:38 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:பல்லடம் அருகே, கஞ்சா விற்பனை நடக்கும் பூங்காவாக உள்ள அம்மா பூங்கா பகுதியில், போலீசார் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, அருள்புரம் உப்பிலிபாளையம் பகுதியில், அம்மா பூங்கா உள்ளது. இப்பகுதியில், அடிக்கடி கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனை, சமூக விரோத செயல்கள் உள்ளிட்டவை அதிகளவில் நடப்பதாக, அடிக்கடி புகார் எழுந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பயன்பட்டுக்காக அமைக்கப்பட்ட அம்மா பூங்கா, கஞ்சா விற்பனை நடக்கும் பூங்காவாக மாறியுள்ளது. இச்சூழலில், நேற்று முன்தினம், இரு வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக இப்பகுதியில் சுற்றித் திரிவதாக, பொதுமக்கள் பல்லடம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், ஆய்வு மேற்கொண்ட போலீசார், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலாஷ் புகார் பிகாரா, 24; பிசாப் பாய், 22 ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த, 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, பல்லடம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us