/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போத்தனுார் வழித்தடத்தில் பாலக்காடு பாசஞ்சர் ரயில்
/
போத்தனுார் வழித்தடத்தில் பாலக்காடு பாசஞ்சர் ரயில்
ADDED : ஆக 12, 2024 11:39 PM
திருப்பூர்;'திருச்சி - பாலக்காடு டவுன் பாசஞ்சர், வரும், 16ம் தேதி முதல் பத்து நாட்களுக்கு, கோவை ஜங்ஷன் செல்லாது. இருகூர் - போத்தனுார் மாற்று வழித்தடத்தில் இயங்கும்,' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருகூர் - போத்தனுார் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் மேம்பாட்டு பணி, வரும், 16ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது. இதனால், திருச்சியில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் (எண்:16843) ஆக., 16 முதல், 19 வரை நான்கு நாட்கள், 23 முதல், 26 வரை நான்கு நாட்கள், ஆக., 30 முதல், 31 வரை இரண்டு நாட்கள் என மொத்தம், பத்து நாட்கள் ரயில் இருகூர் - போத்தனுார் வழித்தடத்தில் பாலக்காடு செல்லும். இந்த நாட்களில், வழக்கமாக வழித்தடமான, சிங்காநல்லுார், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷன் வழியாக பயணிக்காது என, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

