sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வேலம்பட்டி 'டோல்கேட்' பிரச்னை ;நாளை அமைதி பேச்சுவார்த்தை 

/

வேலம்பட்டி 'டோல்கேட்' பிரச்னை ;நாளை அமைதி பேச்சுவார்த்தை 

வேலம்பட்டி 'டோல்கேட்' பிரச்னை ;நாளை அமைதி பேச்சுவார்த்தை 

வேலம்பட்டி 'டோல்கேட்' பிரச்னை ;நாளை அமைதி பேச்சுவார்த்தை 


ADDED : ஜூலை 06, 2024 11:50 PM

Google News

ADDED : ஜூலை 06, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;வேலம்பட்டி சுங்கச்சாவடிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், நாளை அமைதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என, சப் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரையிலான, தேசிய நெடுஞ்சாலையில், வேலம்பட்டி அருகே, சுங்கசாவடி அமைக்கப்பட்டுள்ளது. நீர்நிலையை ஆக்கிரமித்து, சுங்கச்சாவடி கட்டியுள்ளதாக, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கவில்லை என்றும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதற்காக, அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காணலாம் என, சப்-கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். வேலம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர். அதன்படி, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும், 8ம் தேதி, சப்-கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

ஆட்சேபனைதாரர்கள், திட்ட இயக்குனர், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பல்லடம் டி.எஸ்.பி., , 'நகாய்' மேலாளர், திருப்பூர் தெற்கு தாசில்தார், அவிநாசிபாளையம் இன்ஸ்பெக்டர், கோவை தேசிய நெடுஞ்சாலை செயற்பொறியாளர், மாநில நெடுஞ்சாலை செயற்பொறியாளர், பொங்கலுார் பி.டி.ஓ., ஆகியோர், வரும் 8 ம் தேதி (நாளை), சப் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டுமென, சப்- கலெக்டர் சவுமியா அழைப்பாணை அனுப்பியுள்ளார்.






      Dinamalar
      Follow us