sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொள்ளாச்சி ரோட்டுக்கு வழி பொதுமக்கள் எதிர்பார்ப்பு

/

பொள்ளாச்சி ரோட்டுக்கு வழி பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி ரோட்டுக்கு வழி பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி ரோட்டுக்கு வழி பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஏப் 28, 2024 12:09 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:பல்லடத்தில், பொள்ளாச்சி ரோடு, நால்ரோடு சிக்னல் அருகே, தரைமட்ட பாலம் விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதற்காக, பொள்ளாச்சி ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்று வழித்தடம் மூலம் வாகனங்கள் சென்று வருகின்றன.

பொள்ளாச்சி, உடுமலை ரோடு வாகன போக்குவரத்துக்கு மட்டுமின்றி, பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டுக்கும் பிரதானமாக உள்ளது. தாலுகா அலுவலகம் பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ளதால், ஆதார், ரேஷன் கார்டு, இ--சேவை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு தாலுகா அலுவலகம் வரும் முதியோர், தாய்மார்கள், பெண்கள் உள்ளிட்டோர். மாற்று வழியை பயன்படுத்தி வரவேண்டி உள்ளது.

பொதுமக்கள் சிலர் கூறியதாவது:

பல்லடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து தாலுகா அலுவலகம் அரை கி.மீ., துாரம் மட்டுமே உள்ளது. பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள், பொள்ளாச்சி ரோடு பாலம் வேலை காரணமாக, மாற்று வழி பயன்படுத்தி 2 கி.மீ., சுற்றி வர வேண்டி உள்ளது.

இதற்காக, ஆட்டோவில் சென்றால், 100 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. எனவே, பாலம் கட்டுமான பணி முடியும் வரை, பாதசாரிகள் நடந்து செல்ல, நடைபாதை ஏற்படுத்த நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us