sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீர்வைத் தேடும் மக்கள்; அதிகாரிகளை நாடி மனுக்கள்

/

தீர்வைத் தேடும் மக்கள்; அதிகாரிகளை நாடி மனுக்கள்

தீர்வைத் தேடும் மக்கள்; அதிகாரிகளை நாடி மனுக்கள்

தீர்வைத் தேடும் மக்கள்; அதிகாரிகளை நாடி மனுக்கள்


ADDED : ஆக 12, 2024 11:55 PM

Google News

ADDED : ஆக 12, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரச்னைகள் இல்லாத இடம் ஏதும் இல்லை. தீர்வு கிடைத்துவிட்டால், பிரச்னைகள் குறித்த கவலை மாயமாகிவிடும். தங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கைதான், திங்கள்தோறும், கலெக்டர் அலுவலகத்தை நோக்கி மக்களை ஆர்வத்துடன் நகர வைக்கிறது.

'கலெக்டர் சாரையே பார்த்து மனு கொடுத்துட்டு வாரேன்...' என்று, நண்பரிடமோ, பக்கத்து வீட்டினரிடமோ... ஏன் ஊர் முழுக்கவோ கூறிவிட்டுப் புறப்படுவோர் பலர். நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை மட்டும் 492. இதில், எவ்வளவு மனுக்களுக்கு உடனடித் தீர்வு கிடைக்கப்போகிறதோ, தெரியாது. அதிகாரிகள் சொல்லும் கணக்கு வேறுவிதமாகக் கூட இருக்கலாம். ஆனாலும், இன்னும் மனுக்களுக்கென்று ஓர் உயிர்ப்புத்தன்மை இருக்கத்தான் செய்கிறது. சில சமயங்களில், உச்சநீதிமன்றத்தின் கதவுகளைக் கூடத் தட்டி, இவை நியாயம் கேட்டு, வெற்றி பெற்றிருக்கின்றன. இதுதானே, ஜனநாயகம்!

இதோ, நேற்று பெறப்பட்ட சில மனுக்கள், அதிகாரிகள் பார்வைக்கும், வாசகர் பார்வைக்கும்...

காமராஜர் சிலைக்கு எதிரில் மதுக்கடை

குன்னத்துார் பேரூராட்சி, 10வது வார்டில், பஸ் ஸ்டாண்ட் அருகே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில் செயல்படும் இரண்டு மதுக்கடைகளால் மக்கள் தினந்தோறும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

மனமகிழ் மன்றம் அமைந்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும். குடியிருப்பு, கோவில், பள்ளி அமைந்துள்ளதால், தனியார் மதுக்கடை அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது. ஏற்கனவே, காமராஜர் சிலைக்கு நேர் எதிராக, மதுக்கடை செயல்படுகிறது. மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யவேண்டும்.

- பா.ஜ., ஊத்துக்குளி வடக்கு மண்டல தலைவர் சிவகுமார் தலைமையில் வந்த பொதுமக்கள்.

வீசும் துர்நாற்றம்; பெருகிய ஈக்கள்

தாராபுரம் தாலுகா, மானுார்பாளையம் கிராமம், உடையார்பாளையம் குடியிருப்பு அமைந்துள்ளது. தொட்டியன் துறையில் இயங்கும் கோழிப்பண்ணையிலிருந்து, கோழிக்கழிவுகளை வாகனங்களில் ஏற்றிவந்து, உடையார்பாளையத்தில் கொட்டுகின்றனர். இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஈக்கள் பெருகி, மக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டாதவாறு, கோழிப்பண்ணை நிர்வாகத்துக்கு கடிவாளம் போடவேண்டும். உடையார்பாளையம் ஊரில், 500 குடும்பங்கள் வசதிக்கிறோம். எங்கள் பயன்பாட்டில் உள்ள மயானத்தை, சூரிய ஒளி மின் உற்பத்தி பாதையாக மாற்றி, தனியார் ஆக்கிரமித்துவருகிறார். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, மயானத்தை மீட்டுத்தரவேண்டும்.

- குண்டடம் ஒன்றியம், சடையபாளையம் ஊராட்சி தலைவர் ஈஸ்வரன் மற்றும் பொதுமக்கள்.

ஆசிரியர்கள் போதவில்லையே!

திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமி அம்மாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புங்கள். - கொ.ம.தே.க.,






      Dinamalar
      Follow us