ADDED : ஜூலை 08, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை தளி ரோட்டிலுள்ள யூனியன் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில், நிழற்கூரை இல்லாததால், பயணியர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
உடுமலையிலிருந்து, திருமூர்த்திமலை, அமராவதி அணை, சின்னாருக்கு செல்வதற்கு, தளி ரோடு பிரதான ரோடாக உள்ளது.
உடுமலை தளி ரோட்டில், நகராட்சி அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதில், யூனியன் பஸ் நிறுத்தம் முக்கியமானதாக உள்ளது. ஆனால் இங்கு நிழற்கூரை இல்லாததால், பொதுமக்கள், பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, யூனியன் பஸ் ஸ்டாப்பில், உடனடியாக பயணியர் நிழற்கூரை அமைக்க உடுமலை நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

