/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருமாநல்லுார் குண்டம் தேர்த்திருவிழா கொடியேற்றம்
/
பெருமாநல்லுார் குண்டம் தேர்த்திருவிழா கொடியேற்றம்
ADDED : மார் 21, 2024 11:46 AM

அனுப்பர்பாளையம்:பெருமாநல்லுாரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் தேர்த்திருவிழா, வரும், 26ம் தேதி நடக்கிறது.
விழாவையொட்டி, கடந்த பிப்., மாதம் 27ம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள வாக்கு பிள்ளையார் கோவில் சகுனம் கேட்டல், நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. கடந்த, 15ம் தேதி தேர் முகூர்த்தம் மற்றும் ஆயக்கால் நடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு கிராம சாந்தி மற்றும் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
முன்னதாக இரவு 11:00 மணிக்கு ஈஸ்வரன் கோவில் வீதியில், கிராம சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின், கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவில், 24ம் தேதி மஞ்சள் நீராடல், வசந்தம் பொங்கல் வைத்தல், 25ம் தேதி காலை 11:00 மணிக்கு குண்டம் திறந்து பூ போடுதல், 26ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு குண்டம் இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
அன்று மாலை 3:30 மணிக்கு திரு தேர் வீதி உலா வருதல், 30ம் தேதி மஞ்சள் நீர் தரிசனம் நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.
குண்டம் திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் காளிமுத்து மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

