sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'போதை' கணவரால் நிர்க்கதி மகள்களுடன் பெண் மனு

/

'போதை' கணவரால் நிர்க்கதி மகள்களுடன் பெண் மனு

'போதை' கணவரால் நிர்க்கதி மகள்களுடன் பெண் மனு

'போதை' கணவரால் நிர்க்கதி மகள்களுடன் பெண் மனு


ADDED : ஆக 12, 2024 11:37 PM

Google News

ADDED : ஆக 12, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிபோதையால் எத்தனையோ குடும்பங்கள் நிர்க்கதியாகின்றன. இரண்டு மகள்களுடன் நேற்று குறைகேட்பு கூட்டத்துக்கு வந்த ஒரு பெண்மணி, மனு அளித்த பின், கண்ணீர் மல்க கூறியதாவது:

கணவர், பனியன் நிறுவனத்தில் டெய்லர். மூத்த மகள் மூன்றாம் வகுப்பும், இளைய மகள் இரண்டாம் வகுப்பும் படிக்கின்றனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவர், சரிவர வேலைக்குச் செல்வதில்லை.

வாரம் இரண்டு - மூன்று நாள் மட்டும் வேலைக்குச் செல்கிறார். கிடைக்கும் சம்பளம் முழுவதையும் மதுவுக்கே செலவிடுகிறார். எந்நேரமும் மதுபோதையிலேயே இருக்கிறார். குடித்துவிட்டு வந்து, என்னையும், மகள்களையும் துன்புறுத்துகிறார்; தினந்தோறும் அடி உதைபடுகிறேன். வீட்டை விட்டு வெளியேறுமாறு துரத்துகிறார். போலீசில் புகார் அளித்தும், எந்த பயனுமில்லை. கணவரின் குடிப்பழக்கத்தால், ஆதரவற்று நிற்கிறோம். எனக்கும், மகள்களுக்கும், அரசுதான் பாதுகாப்பும், அடைக்கலமும் அளிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us