/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'போதை' கணவரால் நிர்க்கதி மகள்களுடன் பெண் மனு
/
'போதை' கணவரால் நிர்க்கதி மகள்களுடன் பெண் மனு
ADDED : ஆக 12, 2024 11:37 PM
குடிபோதையால் எத்தனையோ குடும்பங்கள் நிர்க்கதியாகின்றன. இரண்டு மகள்களுடன் நேற்று குறைகேட்பு கூட்டத்துக்கு வந்த ஒரு பெண்மணி, மனு அளித்த பின், கண்ணீர் மல்க கூறியதாவது:
கணவர், பனியன் நிறுவனத்தில் டெய்லர். மூத்த மகள் மூன்றாம் வகுப்பும், இளைய மகள் இரண்டாம் வகுப்பும் படிக்கின்றனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவர், சரிவர வேலைக்குச் செல்வதில்லை.
வாரம் இரண்டு - மூன்று நாள் மட்டும் வேலைக்குச் செல்கிறார். கிடைக்கும் சம்பளம் முழுவதையும் மதுவுக்கே செலவிடுகிறார். எந்நேரமும் மதுபோதையிலேயே இருக்கிறார். குடித்துவிட்டு வந்து, என்னையும், மகள்களையும் துன்புறுத்துகிறார்; தினந்தோறும் அடி உதைபடுகிறேன். வீட்டை விட்டு வெளியேறுமாறு துரத்துகிறார். போலீசில் புகார் அளித்தும், எந்த பயனுமில்லை. கணவரின் குடிப்பழக்கத்தால், ஆதரவற்று நிற்கிறோம். எனக்கும், மகள்களுக்கும், அரசுதான் பாதுகாப்பும், அடைக்கலமும் அளிக்க வேண்டும்.