/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாமளாபுரத்தில் 300 பாக்கு மரக்கன்று நடவு
/
சாமளாபுரத்தில் 300 பாக்கு மரக்கன்று நடவு
ADDED : ஆக 27, 2024 11:42 PM

திருப்பூர்;சாமளாபுரம் அடுத்துள்ள புங்குடி தோட்டத்தில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 300 பாக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன.
'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், வட கிழக்கு பருவமழையை அறுவடை செய்யும் வகையில், மரக்கன்று நடும் பணி வேகமாக நடந்து வருகிறது. விவசாயிகள், பயனுள்ள மரக்கன்று நட்டு வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விவசாய நிலம், கோவில்களுக்கு சொந்தமான நிலம், தொழிற்சாலை வளாகங்கள், பொது இடங்களில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகின்றன.
தண்ணீர் வசதி இருந்தால் போதும், விவசாய நிலங்களில், இலவசமாக மரக்கன்று நட்டு கொடுக்கப்படுகிறது; அதற்கு பிறகு தண்ணீர்விட்டு பராமரித்து வளர்த்தாலே போதும்.
அவ்வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' சாமளாபுரத்தில் உள்ள பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான புங்குடி தோட்டத்தில், 300 பாக்குமரக்கன்றுகள் நடப்பட்டது.
இத்திட்டத்தில், இலவசமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.