sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பவர்டேபிள் நிறுவனங்கள் அதிரடி! கூலி உயர்வு வழங்காவிட்டால் சரக்கு டெலிவரி கிடையாது

/

பவர்டேபிள் நிறுவனங்கள் அதிரடி! கூலி உயர்வு வழங்காவிட்டால் சரக்கு டெலிவரி கிடையாது

பவர்டேபிள் நிறுவனங்கள் அதிரடி! கூலி உயர்வு வழங்காவிட்டால் சரக்கு டெலிவரி கிடையாது

பவர்டேபிள் நிறுவனங்கள் அதிரடி! கூலி உயர்வு வழங்காவிட்டால் சரக்கு டெலிவரி கிடையாது


ADDED : ஆக 18, 2024 12:35 AM

Google News

ADDED : ஆக 18, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;''கூலி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதால், நாளை (19ம் தேதி) முதல், சரக்கு டெலிவரி இருக்காது'' என, பவர்டேபிள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

திருப்பூரில் இயங்கும், உள்நாட்டு பனியன் விற்பனைக்கான, நிறுவனங்கள், 'ஜாப் ஒர்க்' முறையில், 'பவர்டேபிள்' எனப்படும், நிறுவனத்திடம், துணியை வழங்கி, பனியன் மற்றும் ஜட்டி ரகங்கள் தைத்து பெறப்படுகின்றன.

பவர்டேபிள் நிறுவனங்களுக்கு, நான்கு ஆண்டுக்கு ஒருமுறை கூலி உயர்வு நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த, 2022 ஒப்பந்தப்படி, 2024 ஜூன் 6 முதல், நடைமுறை கூலியில் இருந்து, 7 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், சில பெரிய நிறுவனங்கள், கூலி உயர்வை வழங்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பவர்டேபிள் சங்க மகாசபை கூடி, விரைவில் கூலி உயர்வை வழங்க வேண்டுமென வலியுறுத்தியது. வரும், 19ம் தேதிக்குள் பிரச்னைக்கு தீர்வு காணாதபட்சத்தில், டெலிவரி செய்வது நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சங்க செயலாளர் முருகேசன் கூறுகையில், ''மகாசபை வாயிலாக, கூலி உயர்வு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தோம். அதன்பின்னரும், சில பெரிய நிறுவனங்கள், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்(சைமா) நிர்ணயித்த கூலி உயர்வை வழங்காமல் இழுத்தடிக்கின்றன. எவ்வித முடிவும் தெரிவிக்காததால், 19ம் தேதி முதல், சரக்கு எடுப்பதும், டெலிவரி செய்வது நிறுத்தி வைக்கப்படும். அதன்பின்னரும், தீர்வு கிடைக்காதபட்சத்தில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.

பவர்டேபிள் சங்க மகாசபை கூடி, விரைவில் கூலி உயர்வை வழங்க வேண்டுமென வலியுறுத்தியது. வரும், 19ம் தேதிக்குள் பிரச்னைக்கு தீர்வு காணாதபட்சத்தில், டெலிவரி செய்வது நிறுத்தி வைக்கப்படும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us