/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒருமையில் பேசிய திட்ட அலுவலர்; அங்கன்வாடி ஊழியர் போராட்டம்
/
ஒருமையில் பேசிய திட்ட அலுவலர்; அங்கன்வாடி ஊழியர் போராட்டம்
ஒருமையில் பேசிய திட்ட அலுவலர்; அங்கன்வாடி ஊழியர் போராட்டம்
ஒருமையில் பேசிய திட்ட அலுவலர்; அங்கன்வாடி ஊழியர் போராட்டம்
ADDED : செப் 17, 2024 11:40 PM

அவிநாசி : ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
அவிநாசி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், ஊழியர்களை ஒருமையில் பேசுவதாக கூறியும், ஒரு ஊழியர் மூன்று மையங்களில் பணியாற்றுவதை ரத்து செய்ய வலியுறுத்தியும், உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
இது குறித்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சித்ரா கூறியதாவது:
சங்கத்தின் உறுப்பினர்களை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார். 140 ஊழியர்கள் இருக்க வேண்டிய அவிநாசி ஒன்றியத்தில், 100 பேர் பணியில் உள்ளனர். 40 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், ஒரே பணியாளர் மூன்று மையத்தை பார்க்க வேண்டியுள்ளது.
பத்து ஆண்டாக பணியில் உள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலரிடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டு இதுவரை செவி சாய்க்கவில்லை.
எங்களது கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திடமும் தெரிவிக்காமல் உள்ளார். அங்கன்வாடி ஊழியர்களையும் உதவியாளர்களையும் ஒருமையிலும் தரக்குறைவாகவும் பேசுகிறார். இது குறித்து மாவட்ட திட்ட அலுவலர் உட்பட பல அதிகாரிகளுக்க பலமுறை தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டம் நீடித்ததால், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, அங்கன் வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் களிடம் ஒருமையில் மற்றும் தரக்குறைவாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார். இதனால், ஊழியர்கள் கலைந்து சென்றனர்.
இந்த விவகாரம் குறித்து, சரஸ்வதி கூறியதாவது:
அங்கன்வாடி உதவி யாளர்கள் சிலருக்கு பென்ஷன் போடப்படா மல் இருந்தது. இரண்டு நாளில், அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆட்கள் பற்றாக்குறை குறித்து, உயரதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். அலுவலகத்தில் தண்ணீர் பற்றாக்குறை குறித்து பலமுறை செம்பியநல்லுார் ஊராட்சியில் தெரிவித்தும் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறுஅவர் கூறினார்.