sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்


ADDED : ஆக 28, 2024 02:19 AM

Google News

ADDED : ஆக 28, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை வட்டாரத்துக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உதயகுமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் அப்துல்காதர் வரவேற்றார். பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். விழாவில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி, பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் சைக்கிள் வழங்கப்பட்டது.

இது தவிர, விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தேவனுார்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வினியோகிக்கப்பட்டன. உடுமலை வட்டாரத்தில் மொத்தமாக, 682 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. விழாவில் அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us