/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒயிலாட்டம் நிகழ்ச்சி; பொதுமக்கள் பாராட்டு
/
ஒயிலாட்டம் நிகழ்ச்சி; பொதுமக்கள் பாராட்டு
ADDED : பிப் 15, 2025 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி, சேவூர் ரோடு, ராக்காத்தம்மன் கோவிலில், நாளை காலை, 9:00 முதல், 10:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, ஆசிரியர் கனகராஜின் சங்கமம் கலைக்குழுவினரின், தமிழர்களின் பாரம்பரிய கலையான ஒயிலாட்டம் நிகழ்ச்சி வ.உ.சி., திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பாரம்பரிய கிராமிய பாடல்களுக்கு ஒயிலாட்டம் ஆடினர். நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து, ஒயிலாட்ட குழுவினரை பாராட்டினர்.

