/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் குறைகேட்பு 8ம் தேதி நடக்கிறது
/
ரேஷன் குறைகேட்பு 8ம் தேதி நடக்கிறது
ADDED : மார் 06, 2025 06:24 AM
திருப்பூர்; மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகாக்களிலும், நாளை மறுநாள் (8ம் தேதி), ரேஷன் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
அவிநாசியில் உப்பிலிபாளையம், தாராபுரம் -- நஞ்சியம்பாளையம், காங்கயம் -- எஜமானர் புதுார், மடத்துக்குளம்- - ராமேகவுண்டன்புதுார், வடக்கு- தாலுகா - வேலம்பாளையம், உடுமலை- - செல்லப்பம்பாளையம், ஊத்துக்குளி - விருமாண்டம்பாளையம், தெற்கு தாலுகா - இடுவாய், பல்லடத்தில், பொங்கலுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலும் குறைகேட்பு கூட்டம் நடைபெறும்.
காலை 10.00 முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று, பொது வினியோகம் சார்ந்த மனுக்களை பெறுகின்றனர்.
பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் போன் எண் பதிவு செய்ய மனுக்களை அளிக்கலாம்.