sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றினால் குறையும் நெரிசல்

/

மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றினால் குறையும் நெரிசல்

மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றினால் குறையும் நெரிசல்

மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றினால் குறையும் நெரிசல்


ADDED : ஆக 23, 2024 12:51 AM

Google News

ADDED : ஆக 23, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்காததால், நெரிசல் அதிகரித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தாராபுரம் மாநில நெடுஞ்சாலை பிரிகிறது.

உடுமலை நகரப்பகுதியில், 2 கி.மீ., க்கும் அதிகமான தொலைவு இந்த ரோடு அமைந்துள்ளது.

மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படும் இந்த ரோட்டில், தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளால், பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது.

இந்த நெடுஞ்சாலையில், நகர எல்லை வரை, சென்டர்மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இருபுறங்களிலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால், சென்டர்மீடியனுக்கும், ஆக்கிரமிப்புக்கும் இடையிலான குறுகலான இடத்தில், அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில், நெரிசல் அதிகரித்து, விபத்துகள் ஏற்படுகிறது.

குறிப்பாக, ரோடு சந்திப்புபகுதிகளில், இரு சக்கரவாகன ஓட்டுநர்கள் ரோட்டை கடக்க முடியாதஅளவுக்கு நெரிசல் தொடர்கதையாக உள்ளது. நகர எல்லை வரை, இதே பிரச்னை காணப்படுகிறது.

ரோட்டின் இருபுறங்களிலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற, பல முறை வலியுறுத்தியும், நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளவில்லை.

இதே போல், ராஜகாளியம்மன் கோவில் அருகே, குடியிருப்பு ரோடுகள், மாநில நெடுஞ்சாலையில் இணைகிறது. அவ்விடத்தில், நெரிசல் அதிகளவு உள்ளது; விபத்துகளும் ஏற்படுகிறது. சந்திப்பு பகுதியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us