sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வறட்சியில் உப்பாறு படுகை அணைக்கு நீர் வழங்க கோரிக்கை

/

வறட்சியில் உப்பாறு படுகை அணைக்கு நீர் வழங்க கோரிக்கை

வறட்சியில் உப்பாறு படுகை அணைக்கு நீர் வழங்க கோரிக்கை

வறட்சியில் உப்பாறு படுகை அணைக்கு நீர் வழங்க கோரிக்கை


ADDED : செப் 04, 2024 01:31 AM

Google News

ADDED : செப் 04, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;நிலத்தடி நீர் மட்டம் உயரவும், குடிநீர் தேவைக்காகவும், பி.ஏ.பி., கால்வாயில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தாராபுரம் அருகே கெத்தல்ரேவ் பகுதியில், உப்பாறு அணை அமைந்துள்ளது. பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், இரண்டு மண்டலங்கள் மட்டுமே பாசனம் இருந்த போது, உப்பாறு அணைக்கு, பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

அரசூர் ஷட்டரில் இருந்து, உப்பாறு வழியாக, அணைக்கு தண்ணீர் செல்லும். பி.ஏ.பி., திட்டம் விரிவுபடுத்தப்பட்ட பிறகு, பிரதான கால்வாயிலிருந்து, உப்பாறு ஓடை வழியாக, தண்ணீர் திறப்பது அரிதாக மாறியது.

குடிமங்கலம், குண்டடம் மற்றும் தாராபுரம் ஒன்றியங்களை சேர்ந்த கிராம மக்கள் அளிக்கும் கோரிக்கை அடிப்படையில், உப்பாறு ஓடையில், கடந்த சில ஆண்டுகளாக, அரசாணை அடிப்படையில், தண்ணீர் திறக்கப்படுகிறது.

தற்போது, போதிய மழை இல்லாமல், உப்பாறு அணை பாசனப்பகுதிகள் மற்றும் வழியோர கிராமங்களில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதித்துள்ளது. பி.ஏ.பி., திட்டத்திலிருந்து, உப்பாறு ஓடை வழியாக தண்ணீர் திறந்து நீண்ட காலமாகிறது.

இதனால், ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் வறண்டுள்ளன. பாசனப்பகுதிகளுக்கு பாதிப்பு இல்லாமல், உப்பாறு அணைக்கு ஓடை வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என வழியோர கிராம விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.






      Dinamalar
      Follow us